தொழிலாளர்கள் பெயரில் கோடி கணக்கில் வங்கிக் கடன் பெற்ற பொறி கடை உரிமையாளர்..!

பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

தொழிலாளர்கள் பெயரில் கோடி கணக்கில் வங்கிக் கடன் பெற்ற பொறி கடை உரிமையாளர்..!

சேலத்தில் தொழிலாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று மோசடி செய்த  பொரிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்துள்ளனர். பால் மார்க்கெட்டில் பொரி வியாபாரம் செய்து வரும் பாபுவிடம், சிலர் கூலி தொழிலாளராக வேலை பார்த்துள்ளனர்.  பொதுத்துறை வங்கியில் வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்தி, தொழிலாளர்களிடம் இருந்து போட்டோ, அடையாள அட்டை ஆகியவற்றை பாபு பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி தொழிலாளர்கள் கையெழுத்தை போலியாக செலுத்தி, அவர்களது பெயரில் சம்பந்தப்பட்ட வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று பாபு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். எனவே பொரிக்கடை உரிமையாளரான பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.