ஈ.சி.ஆர்.பெயர் கருணாநிதி சாலை என்று மாற்றம்..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!!

கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டுவதால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

ஈ.சி.ஆர்.பெயர் கருணாநிதி சாலை என்று மாற்றம்..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!!

திருச்சி மாவட்டத்தில் சாலை மேம்பாடு மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அப்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

பின்னர் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலுவிடம், கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை செப்பனிட்டு, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி என்றும் அதனால் அந்த சாலைக்கு அவரது பெயரை சூட்டுவதால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது என தெரிவித்தார்.