துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த சாமியார்...இணையத்தில் வைரலான வீடியோ!

துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த சாமியார்...இணையத்தில் வைரலான வீடியோ!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து ஊழியர்களை மிரட்டிய சாமியாரை போலீசார் கைது செய்தனர். 

லட்ச கணக்கில் பண பரிமாற்றம்:

குடவாசல் பகுதியை சேர்ந்த திருமலை சாமிகள் என்பவர் இடி, மின்னல் சங்கமம் என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.  மஞ்சகுடி சிட்டியூனியன் வங்கியில் கணக்கு வைத்துள்ள இவர் லட்ச கணக்கில் பண பரிமாற்றம் செய்து வந்ததாக தெரிகிறது.

துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த சாமியார்:

இந்நிலையில் சாமியார் அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தபோது, வங்கி் ஊழியர்கள் கடன் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமியார், கையில் துப்பாக்கியுடன் சிட்டி யூனியன் வங்கிக்கு சென்றுள்ளார். 

இதையும் படிக்க: திமுகவில் இருந்து விலகினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்..2021 தோல்வி தான் காரணமா?

வீடியோ பதிவு:

தொடர்ந்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து புகை பிடித்துள்ளார். இதை அவரது சீடர் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். 

சாமியார் கைது:

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாமியார் திருமலையை குடவாசல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.