சொத்துப்பட்டியலுக்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்க வில்லை - அண்ணாமலை பேட்டி!

சொத்துப்பட்டியலுக்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்க வில்லை - அண்ணாமலை பேட்டி!

திமுகவினரின் ஊழல் பட்டியலின் அடிப்படையில்  டெல்லி சென்று மத்திய புலனாய்வு அமைப்பில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தன் மீது திமுகவினர் எங்கு வழக்கு பதிவு செய்தாலும் அங்கு நான்கு மணி நேரம் கிடைத்தால் கட்சியை வளர்ப்பதற்காக பயன்படுத்துவேன் என்று கூறினார்.

இதையும் படிக்க : திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை மாறி...காவல்துறைக்கே பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

மேலும், தான் குற்றம் சாட்டிய நிறுவனங்கள் எதுவும் தங்களுடையது இல்லை என்று யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும், இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவினரின் ஊழல் பட்டியலின் அடிப்படையில், அடுத்தவார இறுதிக்குள் டெல்லி சென்று மத்திய புலனாய்வு அமைப்பில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறினார்.