பிரபல இளம் ஓவியர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் பிரபலங்கள்
பிரபல இளம் ஓவியர் இளையராஜா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் செம்பியவரம்பல் எனும் கிராமத்தினைச் சேர்ந்த இளையராஜா. இவர் ஓவியக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் மிகுந்த கவனம் பெற்றார்.
2009 ஆம் ஆண்டு "திராவிடப் பெண்கள் கண்காட்சி" என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரியில் கண்காட்சி நடந்தது. இதில் இளையராவின் ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டன.
படிப்பு முடித்து சென்னைவந்தப்போது ஒருநிகழ்வில் ஓவியர் இளையராஜா நடிகர் பார்த்திபனை சந்திக்க நேர்ந்தது. அப்போது பத்து நிமிடங்களில் பார்த்திபனை 'போர்ட்ரைட்' வரைந்து கொடுத்தார்.
அதற்கு பாராட்டிய பார்த்திபன் சில நாட்கள் கழித்து அவரை அழைத்து 'இவன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். 'எதிர்கால இயக்குநர்கள்' என்று டைட்டிலில் பெயர் போட்டு ஓவியர் இளையராஜாவை உற்சாகப்படுத்தினார்.
இதனிடையே அவரது மறைவுச்செய்தி பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நம்மையெல்லாம் தன் கோடுகளின் மூலம் ரசிக்க வைத்த ஓவியர் இளையராஜா இனி இல்லை என்ற அதிர்ச்சியான தகவலில் இன்றைய காலை விடிந்திருக்கிறது..
ஓவியனுக்கு மரணமில்லை..