வெயில் 2 நாட்களுக்கு கொளுத்த போகுது !!! பக்குவமாக இருந்துக்கோங்க

வெயில் 2 நாட்களுக்கு கொளுத்த போகுது !!! பக்குவமாக இருந்துக்கோங்க

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 8 ஆம் தேதியில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வெப்பநிலை பொருத்தவரை, ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | பிளாஸ்டிக் தடை உத்தரவு - தமிழ்நாடு அரசு அதிரடி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.