பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை.. போக்குவரத்துத்துறை  எச்சரிக்கை!!

சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்துநர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக அவ்வபோது புகார்கள் வரும் நிலையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும்  நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும் என  போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ள போக்குவரத்து துறை, பேருந்தை பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது என்றும்  இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  போக்குவரத்துத்துறை எச்சரித்திருக்கிறது.