கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி..!

மனைவியை கைது செய்து உண்மையை அம்பலப்படுத்திய போலீஸார்..!

கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி..!

அரும்பாக்கத்தில் கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். இவருக்கும்  மனைவி தனலட்சுமிக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்ட நிலையில் கையில் ரத்தக்காயத்துடன்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனலட்சுமி அனுமதிக்கப்பட்டுருந்தார். தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும்  பூட்டு போட்டிருந்த வீட்டை  உடைத்து பார்த்த போது ஆனந்த குமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இது தொடர்பாக தனலட்சுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்திய போது கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக மனைவி நாடகமாடியது அம்பலமானது.