சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்....போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்....போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில்  பணியாற்றி வந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான  சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.


இதற்கிடையில் திருமண ஆசைகாட்டி சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.