இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு: மா.சு தகவல்

இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு:  மா.சு தகவல்

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 2 நாட்களில் போட்டு முடிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 504 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய தொகுப்பில் இருந்து 83 லட்சம் தடுப்பூசிகளும், நேரடி கொள்முதல் மூலம் 13 லட்சம் தடுப்பூசிகளும் தமிழகத்திற்கு வந்ததாகவும், மொத்தமாக வந்த 96 லட்சம் தடுப்பூசிகளில் 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் 5 லட்சம்  தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்றுடன் போட்டு முடிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், மத்திய அரசு தொகுப்பில் இருந்து மேலும் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.