இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை... மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நெல்லை கண்ணன்...

இந்தத் தலைமுறைக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார் நெல்லை கண்ணன்.

இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை... மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நெல்லை கண்ணன்...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா 2021 சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்றது.  இவ் விழா வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ விற்கு பெரியார் ஒளி, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர், பி. வி.கரியமாலுக்கு அயோத்திதாசன் ஆதவன் விருது, பஷிர் அகமதுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், மொழியிலாளர் இராமசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காமராசர் கதிர் விருது பெற்ற நெல்லை கண்ணன் பேசியதாவது :

இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை. உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் முதல்வரே. திருமா நீங்களும் உங்கள் நலனைபார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதல்வராக பதிவேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றவுடன் உங்கள் துணை வியார் கண்கலங்கினார் அப்போது நானும் கண்கலங்கி விட்டேன். நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் என கண்ணீர் மல்க பேசினார்.