"மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறில்லை" ...! அமைச்சர் பேச்சால் அதிர்ந்து போன திமுக.
பிரதமர் மோடியையும், ஒன்றிய அரசையும் திமுகவினர் பல்வேறு விமர்சனங்கள் செய்து வரும் நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மத்திய அரசுடன் இணக்கமாக செயல் பட வேண்டும் என்றும் பிரதமர் நன்றாக செயல்படுகிறார் என்ன பேசியது திமுகவினிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டுகளே சாட்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்:- கடந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. காவிரி கூட்டுநீர் திட்டம் பல மாவட்டங்களுக்கு சென்று வருவதால் தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் தமிழக முதல்வர் உத்தரவின் படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் தனியாக குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், "மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும். இணக்கமாக இருப்பதில் தவறில்லை. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்", என்றார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில் முதியோர் ஓய்வு ஊதிய திட்டத்தில் பல்வேறு தவறுகள் குற்றச்சாட்டுகள் இருந்தது எனவும், அதை மாற்றி புதிய முறையில் முதல்வர் ஒரு லட்சம் பேருக்கு வழங்கி தொடங்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது 250 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டை விட நிதி மேலாண்மை திட்டத்தில் 19கோடி ரூபாய் மிச்சம் செய்துள்ளதாகவும், சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார். நிதி மேலாண்மை திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் "இது அரசு விழா; அதிகாமாக அரசியல் பேசமாட்டேன்", என்றார்.
மேலும் இந்த ஆட்சி யாருக்கும் பயப்படாத ஆட்சி எதற்கும் பயப்படாத ஆட்சி தமிழக முதல்வர் யாரைக் கண்டும் பயப்பட மாட்டார் என தெரிவித்தார்.
மேலும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்குவதற்காக மேடையின் முன்புறத்திலேயே வண்டியின் மீது அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் மேடையில் உள்ள பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு செல்ல முயன்றார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் உள்ளது என கூறியவுடன் மேடையை விட்டு இறங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது விழாவில் கலந்து கொள்ள வந்த அனைவரும் சென்று விட்டனர். இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அமைச்சர் சென்றுவிட்டார்.
அமைச்சர் பேசும்போது மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் இணக்கமாக செயல்படுவதில் தவறில்லை பிரதமர் நன்றாக செயல்படுவதகாக பேசியது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுததி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க } "போக்குவரத்து கழகங்களில் இனி அவுட் சோர்ஸிங்" அமைச்சர் சிவசங்கர்...!!