திருச்செந்தூர் முருகன் கோயில்: ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கையாக வசூல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டிய காணிக்கையாக மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 

திருச்செந்தூர் முருகன் கோயில்: ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கையாக வசூல்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இந்த மாதம் மட்டும் மூன்றாவது முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பணியில் கோயில் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் 3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 ரூபாயும்,  2 ஆயிரத்து 284 கிராம் தங்கமும்,  26 ஆயிரத்து 517 கிராம் வெள்ளி உள்பட 132 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.