பொதுச் சொத்துக்களை அடமானம் வைப்பதா...  மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்...

பொதுச்சொத்துக்களை அடமானம் வைத்து, ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்.

பொதுச் சொத்துக்களை அடமானம் வைப்பதா...  மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்...

பொதுச் சொத்துக்களை அடமானம் வைத்து, 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை, திருமாவளவன் எம்.பி. கண்டித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில், கண்காணிப்பு குழுவின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், நான்காண்டு கட்டமைப்பு வசதிகளுக்காக அரசின் சொத்துக்களை அடமானம் வைத்து 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என மத்திய அரசு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.