சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும்

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும்

தமிழகத்தில் நடைபெறும் சட்டவிரோத கிரானைட் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளிடமிருந்து கிரானைட் வளங்களை பாதுகாக்க கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தனிப்பட்ட விரோதம் காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனிப்பட்ட விரோதம் இருந்தாலும், ஆக்கிரமிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் அரசு நிலமாக இருப்பதால் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர். மேலும் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக கிரானைட் கொள்ளை எங்கு நடைபெற்றாலும் அதற்கு முடிவுகட்ட வேண்டும் எனவும்

 கிரானைட் வளங்களை பாதுக்காப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு  நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து மனுதாரர் குறிப்பிடும் இடத்தில்  ஆக்கிரமிப்பு இருந்தால், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு நீதிபதிகள்  தள்ளிவைத்தனர்.