வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம்...

செங்கல்பட்டு அருகே வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் பிறந்த குழந்தை உயிரிழந்த சோகம்...

பாலூர் அடுத்த கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் எல்லப்பன் என்பவரது மகள் ரேகா, இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ரேகா கர்ப்பமாகியுள்ளார். இதனையறிந்த ரேகாவின் பெற்றோர் அவரை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

8 மாத கர்ப்பிணியான ரேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரேகாவிற்கு பிறந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரேகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்துள்ளார்.

 பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த புகாரின்பேரின்  ரேகாவின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீசார், இறந்தநிலையில் மறைத்து வைக்கப்பட்ட குழந்தையை கழிவறையில் இருந்து மீட்டெடுத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ரேகாவின் பெற்றோர் மற்றும் கர்ப்பத்திற்க்கு காரணமான சதீஷிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.