இன்று முதல் இவர்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!

இன்று முதல் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயணச்சீட்டு வழங்கும் முறை இன்றிலிருந்து அமலுக்கு வந்தது. 

இன்று முதல் இவர்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!

இன்று முதல் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயணச்சீட்டு வழங்கும் முறை இன்றிலிருந்து அமலுக்கு வந்தது. 

திமுக அரசு பொறுப்பேற்ற அன்று பெண்கள் நகரப் பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்து அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் இலவச பயணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், அவருக்கான உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பயணம் செய்யும் வகையில் இலவச பயணச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்தில் இலவச பயணம் மிகவும் உதவிகரமாக இருப்பதாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.