திருச்சி மாநாடு... சாதிப்பாரா ஓபிஎஸ்...!!

திருச்சி மாநாடு... சாதிப்பாரா ஓபிஎஸ்...!!

திருச்சியில் 3 லட்சம் பேர் ஒன்றிணைத்து பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படும் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் நடைபெற இருக்கும் மாநாட்டில் 
3 லட்சம் பேரை கூட்டி பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு, திருச்சி மாநாடு குறித்து பேச ஆரம்பித்தார்.  அதனைக் குறித்து பேசுகையில் மாநாடு குறித்து முக்கிய தலைவர்களுக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கவில்லை எனவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துவிட்டு அழைப்பு விடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி திருச்சியில் நடைபெறயிருக்கும் மாநாட்டில் 3 லட்சம் பேரை கூட்டி பிரம்மாண்டமான மாநாடு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸின் அறிவிப்பை கேட்டபின் பல அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.  ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வாய்ப்பில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஓபிஎஸ்ஸின் மாநாட்டை அவர் எண்ணியவாற் நடத்தி முடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடையேயும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   போலீசில் வேலை செய்தால் பித்தளைதான் வாங்க முடியும், ஆனால் .... எம்ஆர்கே பன்னீர்செல்வம்!!!