தனியார் பேருந்து பைக் மோதல்... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி...

திருச்சியில், இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, தனியார் பேருந்து மோதிய விபத்தில், இரண்டுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தனியார் பேருந்து பைக் மோதல்... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி...

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த மாலிக் மற்றும் ஷாஜகான் இருவரும் டூவிலரில் வந்தபோது அரியமங்கலம் பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில்  சாலையை கடக்க முயன்றனர். அப்போது திருவெறும்பூரில் இருந்து சத்திரம் நோக்கி சென்ற தனியார்  பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் டூவீலர் பேருந்தின் முன்பக்க  அருகே சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த மாலிக் மற்றும் ஷாஜகான் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்தவர்களின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிவேகத்தில் பேருந்து இயக்கபட்டதாலும்,  கவனக்குறைவாக டூவீலரை இயக்கியதாலும் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.