இரு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த இருவர்...! கைது செய்து விசாரணை நடத்தும் போலீசார்..!

திருவெண்ணைநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்...

இரு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த இருவர்...! கைது செய்து விசாரணை நடத்தும் போலீசார்..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த பாவந்தூர் பகுதியில் தனிப்படை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மடப்பட்டு பகுதியில் இருந்து பாவந்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது தனிபடை போலீசார் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில், இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் குட்காவை கடத்தி வந்த மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34), மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்(53) என்பது தெரிய வந்தது. மேலும், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.