தடுப்பூசி போட்டால் தான் வேலை! மாவட்ட நிர்வாகம் அதிரடி

தடுப்பூசி போட்டால் தான் வேலை! மாவட்ட நிர்வாகம் அதிரடி

நீலகிரி மாவட்டத்தில், கேரட் அறுவடை பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில் மலைப் பயிர்களான, கேரட், முட்டைகோஸ், காளிப்ஃபிளவர் போன்ற காய்கறிகள்  அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாவட்டத்தின் பல பகுதிகளில் கேரட் அறுவடை பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதால், அவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரவை மீறி அலட்சியம் காட்டுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.