திருமாவளவன் திமுகவிலிருந்து பாஜகவுக்கு வாங்க அழைப்பு விடுக்கும் வானதி சீனிவாசன் ......

திருமாவளவன் திமுகவிலிருந்து பாஜகவுக்கு வாங்க அழைப்பு விடுக்கும் வானதி சீனிவாசன் ......

கோவை காந்திபுரம் இரண்டாவது வீதியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அ ஆ இ ஈ பாடம் எடுத்தார்.

இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது..

கர்நாடக தேர்தல் முடிவு

இனி கட்டப்படும் அங்கன்வாடிகளுக்கு சோலார் திட்டம் வைத்துள்ளோம்.அங்கன்வாடி  மையங்களுக்கு அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும்.கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும்.பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. மக்களிடம் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் முடிவு உள்ளது.தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல முடியாது.

மேலும் படிக்க | கள்ளச்சாராய வியாபாரம் - நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்!

முதல்வர் கனவு கண்டு வருகிறார்.அப்படி என்றால் திமுக எத்தனை முறை துடைத்தெறியப்பட்டுள்ளது.
திராவிட நிலப்பரப்பு என்று மற்ற மாநில முதல்வர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வார்த்தை அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார். காங்கிரஸ் ஏன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த மாநிலத்தில் தோல்வியுற்றார் என்பதை கவனிக்கட்டும். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டபுள் டிஜிட்டில் கூட இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது.

தோல்வியின் காரணங்களை ஆராய்வோம்

ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது. ஏன் ஒரு சட்டமன்றத்திற்கு அவ்வளவு அமைச்சர்களை வைத்து வேலை செய்தார்கள். தோல்வியின் காரணங்களை ஆராய்வோம். சரி செய்ய முயற்சிப்போம். சொந்தத் தொகுதியில் தோற்கப் பல காரணம் இருக்கலாம். சிடி ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது. அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.

மேலும் படிக்க | வேளாண் தேர்வு... அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்....அன்புமணி இராமதாஸ்

மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள்

பாராளுமன்றத் தேர்தலுக்கு கர்நாடகத்தின் தோல்வி பிரச்சனையாக இல்லை.ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. அப்போதும் முழுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் ஜெயித்தனர். மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பாஜக ஆட்சி நூறு சதவீதம் உறுதி.

திருமாவளவன் திமுக கூட்டணியிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் 

Thiruma Valavan vs RSS vs October 2 | விசிகவின் அக்டோபர் 2ம் தேதி பேரணிக்கு  அனுமதி கோரும் திருமாவளவன் | Tamil Nadu News in Tamil

திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு ஆகாது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்த பட்டியல் இன பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார்.திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல் குடும்ப அரசியல் தான் திராவிட மடல் என நிரூபிக்கின்றனர் என பேசினார்