தமிழக ஆளுநர் திருவள்ளுவருக்கு மத சாயம் பூச முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு !

தமிழக ஆளுநர் திருவள்ளுவருக்கு மத சாயம் பூச முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு !

சென்னை ஆளுநர் மாளிகையில் நிர்மலா தேஷ்பாண்டே நினைவு தினம் மற்றும் காந்தியின் தத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் முனிவர் திருவள்ளுவர் கூறியது போல் நாம் அனைவரும் ஆதி பகவானின் குழந்தைகள் என்றும், பிறர் நலம் பேணும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் தமிழ் புலவர் திருவள்ளுவரை முனிவர் என்றும், உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது என அவர் கூறியதை மாற்றி நாம் அனைவரும் ஆதி பகவானின் குழந்தைகள் என்றும் ஆளுநர் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் திருவள்ளுவருக்கு மத சாயம் பூச முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.