விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட்...தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...!

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட்...தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...!

கள்ளச்சாராய மரணம் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ள நிலையில், விழுமாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

இதையும் படிக்க : முதலமைச்சரிடம் பேசுவதற்கு தங்களை அனுமதிக்கவில்லை...பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தொடர்ந்து கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும், இந்த துயர சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.