கோழிக்கால் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

திருவாலங்காடு அருகே சிக்கன் பக்கோடா சென்டரில் கோழிக்கால்களை வாங்கி சாப்பிட்ட இரண்டு சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கால் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு நித்திஷ் என்ற 11 வயது மகனும்,  ஜீவன் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில்  வெங்கடேசன் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது, சின்னம்மா பேட்டை டாஸ்மார்க் கடை அருகே உள்ள சிக்கன் பக்கோடா சென்டரில், குழந்தைகளுக்கு கோழிக்கால்களை வாங்கி வந்துள்ளார்.

வீட்டில் கோழிக்கால்களை சாப்பிட்ட சிறுவர்களுக்கு, சிறிது நேரத்தில்,  வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்,  திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.