டிச.9-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

சூடு பிடிக்க ஆரம்பிக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள்..!

டிச.9-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் அலுவலர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி ஆகியோர் நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வரும் 9-ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் ஆன்லைன் தகவல் பதிவு, ஓட்டுச்சாவடிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், மாற்றுதிறனாளிகள், முதியோர்களுக்கான வசதிகள், ஓட்டுச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.