சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவோம்.. முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு.!  

சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவோம்.. முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு.!  

சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத் தருவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

மதுரை திருமங்கலம் டி. குன்னத்தூர் ஜெயலலிதா திருக்கோவிலில் ஜெயலலிதா பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.  

அதில் பேசிய அவர், தற்போது அமமுக கட்சி கூடாரத்தில் இருந்தவர்கள் அனைத்தும் வெளியே சென்றதால் அது தற்போது காலி கூடாரமாகிவிட்டது என விமர்சித்த அவர், தற்போதைய அரசு அமைந்து 60 நாட்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால், மக்களுக்கு போதிய அளவு தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என குற்றம்சாட்டினார். 

மேலும், தற்போது கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் நாள் கணக்கில்  நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு ஒன்றிய அரசு இல்லை மத்திய அரசால் என விவாதம் செய்து கொண்டிருக்கிறது என விமர்சித்தார்.  அதோடு, இன்றைக்கு அதிமுக ஆட்சியில் காவல்துறை தாக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்து குரல் கொடுத்த திமுக, தற்போது வியாபாரி முருகேசனை காவல்துறையினர் அடித்து உயிர்களுக்கு செய்த போது குரல் கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைகள் அனைத்தும் பெற்றுத் தரும் என கூறினார்.