மக்கள் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

நகர்ப்புற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வழங்கிய  வெற்றிக்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் உறவாக இல்லாமல், கொள்கை மற்றும் பாச உணர்வாக கூட்டணி தொடர்வதால் வெற்றி சாத்தியமானது என்று கூறியுள்ளார்.  திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்றும் பெருமிதம் தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், நம்பிக்கையை காப்பாற்றி உள்ளோம் என்பதை உணர்ந்து மக்கள் அளித்த அங்கீகாரம்தான்  உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அரசின் திட்டங்களை மக்களின் கைகளில் கொண்டு போய்ச் சேர்க்கும் கடமை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு 
 என்று கூறியுள்ள முதல்வர், அவை முழுமையாக மக்களை வந்தடைகிறதா என்பதையும் நேரடியாக  பார்வையிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
உதயசூரியனைத் தவிர வேறு பக்கம் திரும்ப மாட்டோம் என்பதை மக்கள் காட்டி விட்டதாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.  மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.