தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? வெளியான புதிய தகவல்...

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு அல்லது கரண் சின்ஹா ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? வெளியான புதிய தகவல்...

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி தமிழக டிஜிபியாக பதவியேற்ற திரிபாதி, வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. யுபிஎஸ்சி குழு மற்றும் மத்திய உள்துறை செயலருடன் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் தற்போதைய டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியலில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, கந்தசாமி உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இதிலிருந்து மூவர் இறுதிசெய்யப்பட்டு அதில் ஒருவரே புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார். இந்த நிலையில், சைலேந்திர பாபு மற்றும் கரண் சின்ஹா ஆகிய இருவரில் ஒருவரே புதிய டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.