2டிஜி மருந்து ஏன் விற்பனைக்கு வரவில்லை.. பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
2டிஜி மருந்து ஏன் விற்பனைக்கு வரவில்லை பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு இன்று தொடங்குகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதுமட்டுல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் துறை ரீதியாக அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!
சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிக்கபட்ட திட்டங்கள், நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை, மானிய கோரிக்கையின் போது அறிவிக்கபட்ட திட்டங்கள் ஆகியவற்றின் நிலை மற்றும் அவற்றை விரைவாக செயல்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
அதே போல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் செயல்பாடுகள், உலக முதலீட்டாளர் மாநாடு, பண்டிகை கால பாதுகாப்பு, முதலமைச்சர் காலை உணவு திட்டம், நாடாளுமன்றத் தேர்தலின் போது சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இம்மாநாட்டில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பாஜக உடனான கூட்டணி என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் கிடையாது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாய் விளம்பரங்களாலும் வெற்று விளம்பரங்களாலும் அனைத்தையும் செய்து விட்டோம் என ஏமாற்றி வருவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!
உதவித்தொகைக்கும் உரிமை தொகைக்கும்m கூட வித்தியாசம் தெரியாமல், மக்களை எப்படி திறமையாக ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், பாஜக உடனான கூட்டணி என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் கிடையாது எனவும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
புலிகள் இறப்பு குறித்து தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா் மதிவேந்தன் தொிவித்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாகன வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன், செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!
அப்போது பேசிய அவர், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவது குறித்து உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
மேலும் புலிகளின் இறப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், வனத்துறை அதிகாரிகளின் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவா்த்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சம்பத் நகர் பூங்காவில் நடைபெற்றது. அப்போது அலங்கியம் ரோடு ராம் நகர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து எாித்தபோது எாிந்து சேதமடைந்த வைக்கோல்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கூட்டத்தில் டெங்கு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் மட்டியாரேந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது வறட்சி நிவாரண தொகை வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு கண்டனம் தொிவித்தனா். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க : சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!
இதேபோல் திருப்பத்தூா் மாவட்டம் தேவலாபுரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் இமாம் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது பேச்சுவாா்த்தை நடத்தவந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஜாதிகவுண்டன்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கோவை மாவட்டம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவலப்பருத்தியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோாி அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட போது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் போலீசார் தடியடி நடத்தியதால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் பகுதியில் வசித்து வரும் அருந்ததியர் சமூக மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் கோயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் உடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால், ஆவேசம் அடைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால் இந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
இதனிடையே, மோதலில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்ட அருந்ததியர் இன மக்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!