கணவன் உடலை மீட்டு தர மனைவி கண்ணீருடன் கோரிக்கை..!

கணவன் உடலை மீட்டு தர மனைவி கண்ணீருடன் கோரிக்கை..!

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தனது கணவனின் உடலை மீட்டு தரக் கோரி, பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சை மாவட்டம், குலமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். சவுதி அரேபியாவில் கட்டிட பணியாளராக வேலை செய்து வந்த இவர் கடந்த 9- ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக, சவுதி அரேபியா நாட்டின் தூதரக அதிகாரிகள், அவரது மனைவி கண்ணகியை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் எனவும், கண்ணகி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.