மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒத்துழைத்தால் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! என்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதலமைச்சர், பொதுமக்கள் தங்களை கொரோனா தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதோடு, பிறருக்கும் பரப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முழு ஊரடங்கால் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் பாதிப்பு முழுவதுமாக குறைந்து விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியாது என்றும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.