குடியிருப்பு பகுதியில் உலா வந்த செந்நாய்கள்

உதகையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள் சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்

குடியிருப்பு பகுதியில் உலா வந்த செந்நாய்கள்

உதகையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட செந்நாய்கள் சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம்உதகையில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுமார் 10க்கும் அதிகமான செந்நாய்கள் சுற்றித் திரிந்துள்ளன. சர்வ சாதாரணமாக அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்த செந்நாய்களால் அச்சத்தில் உறைந்த அப்பகுதிவாசிகள், வெளியே நடமாடாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும் செந்நாய்களை வனப்பகுதிக்குள் விரட்டியக்கவும் வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.