வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் கைது.....

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெண்னை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் கைது.....

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ரஞ்சித்குமார். கடந்த 2020- மார்ச் மாதம்  உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி சாலையில் சினிமா பட பாணியில், காரில் வந்த கும்பல்  வெட்டி படுகொலை செய்தது.  

இந்த கொலை வழக்கில் 12 பேர் மீது உத்தமபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கருநாக்கமுத்தன்பட்டியை  சேர்ந்த மயிலம்மாள்(66), என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.

போலீசாருக்கே டிமிக்கி கொடுத்து வந்த மயிலம்மாளை, தனிப்படை அமைத்து தேனி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் சென்னையில் இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மயிலம்மாளை சுற்றி வளைத்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.