மூன்றாம் உலக போர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் - துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு!

துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு...

மூன்றாம் உலக போர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் - துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு!

சென்னையில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் இயக்கம் சார்பில் மூன்றாம் உலக போர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ரஷ்ய உக்ரைன் போர், உலக நாடுகளை மூன்றாம் உலக போரை நோக்கி கொண்டு செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறி பெசன்ட்நகர், ராஜரத்தினம் அரங்கம், வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் அவ்வியக்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்கத்தின் கொள்கை பிரச்சாரகர் தாஹிர் அஹ்மத், மூன்றாம் உலக போர் உருவானால் அது அணு ஆயுத போராகத்தான் இருக்கும், அப்படியான போர் சூழல் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்பதால் மூன்றாம் உலகப் போர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.