மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஆவின் ஊழியர்கள்!

ஆவின் நிர்வாகம் பண பலன் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை முறையாக பெற முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த ஆவின் ஊழியர்கள்!

ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 400 க்கும் மேற்பட்டோருக்கு பண பலன் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்கள்

மதுரை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பணி ஓய்வு பெற்றும் பல ஆண்டுகளாக பண பலன் கிடைக்காமல் பொருளாதார ரீதியாகவும் உணவு , மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை கூட பணமில்லாமல் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாக ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆவின் நிர்வாகம் பண பலன் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை முறையாக பெற முடியாமல் உள்ளதாகவும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உணவிற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். தங்களுக்கு ஆவின் நிர்வாகத்தால் வழங்க வேண்டிய பணப்பலனை இனியாவது தாமதம் இன்றி உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் 

ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம் வரை பண பலன் வழங்கப்படாமல் உள்ளதாகவும் அதனை வழங்கினால் தங்களது குடும்பத்தில் பொருளாதார மற்றும் தங்களின் மருத்துவ செலவுக்கு உதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்தில் மன பலம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஓய்வு பெற்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.