கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்.! அமைச்சர் நாசர்  அறிவிப்பு.! 

கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும்.! அமைச்சர் நாசர்  அறிவிப்பு.! 

ஆவின் பால் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதால் 270 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய உற்பத்தியை அதிகரித்து கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல்லையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி.

நெல்லை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள் மற்றும் ஆவின் உற்பத்தி நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் சமு நாசர் நேரில் ஆய்வு செய்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு காலத்தில்  தேவையான அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள் களப்பணிகளை செய்து பந்தய குதிரை வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன்மூலம் கொரோனா நோயை ஒழித்திடும் முயற்சியில் தமிழக முதல்வர் வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  


மேலும், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டு அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருவதாக தெரிவித்த அவர், ஊரடங்கு காலத்தில் மிகவும் அத்தியாவசிய தேவையான பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெற்று விற்பனை செய்வது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகள் நடந்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஆவின் பால் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருவதாக தெரிவித்தார்.


அதோடு ஆவின் நிறுவனம் தற்போது லாபகரமாக இயங்கி வருவதாகவும் . ஆவின் பால் ரூபாய் மூன்று விலை குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இழப்பை சரி செய்யும் விதமாக உற்பத்தியை கூடுதல் படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்குவிற்பனை செய்ய  திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.