யாரையும் விட்டுடாத நண்பா,..பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தூக்கில் போடவேண்டும்.!அமைச்சருக்கு விஷால் கோரிக்கை.! 

யாரையும் விட்டுடாத நண்பா,..பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தூக்கில் போடவேண்டும்.!அமைச்சருக்கு விஷால் கோரிக்கை.! 

பி.எஸ்.பி.பி பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் தமிழக அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. 


இந்நிலையில் நடிகர் விஷால் பி.எஸ்.பி. பி பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தூக்கில் போடவேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அவரது நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு  விஷாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை  வைத்துள்ள விஷால் "பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோரிடம் யாராவது மன்னிப்பு கேட்காத அந்த பள்ளி மூடப்பட வேண்டும்  மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலையிட்டு இந்த சம்பவத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.