டேங்கர் லாரி மீது மோதிய ஆம்னி வேன்... 9 மாத குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி!!

டேங்கர் லாரி மீது மோதிய ஆம்னி வேன்...  9 மாத குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி!!

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் 9 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏறடுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 8 பேர் நேற்று ஆம்னி வேனில் வேலூர் குடியாத்தத்தில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூளூருக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  டேங்கர் லாரியின் பின்புறத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள், 9 மாத கைக்குழந்தை, வேன் ஓட்டுநர் சுரேஷ் என 4 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்கள்.

படுகாயமடைந்த 4 பேரில் ஒருவர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் துடிதுடித்து உயிரிழந்தார். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாலும், ஊரடங்கால் சாலை வெறிச்சோடிக் கிடந்ததால் அதிவேகமாக வேனை ஓட்டி வந்ததால், விபத்து ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.