நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

முதலமைச்சர் கடிதம்

ஈரப்பதம் அதிகரித்து காணப்படும் நிலையில் 22 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய ஆய்வுக் குழு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

விவசாயிகள் கோரிக்கை

தஞ்சையில் நேற்று ஆய்வு நிறைவடைந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று மத்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய (ஹைதராபாத்) துணை இயக்குநா்  கான் தலைமையில் இந்திய உணவுக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொழில்நுட்ப அலுவலா் சி. யூனுஸ் ஆகியோா் நாகப்பட்டினம் மாவட்டம் பட்டமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

அவர்களிடம் விவசாயிகள் 22 சதவீதமாக ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.