சின்னத்திரை படப்பிடிப்புக்குச்சென்ற வேன் விபத்து: இருவர் பலி
ஏற்காடு அருகே சென்னையிலிருந்து படப்பிடிப்பிற்காக சென்ற சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஏற்காடு அருகே சென்னையிலிருந்து படப்பிடிப்பிற்காக சென்ற சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சின்னத்திரை படப்பிடிப்பிற்காக சென்னையைச் சேர்ந்த படப்பிடிப்பு குழுவினர் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்காட்டில் படப்பிடிப்பை முடித்து பின்னர் அங்கிருந்து பெலாத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்த சென்றுள்ளனர். ஏற்காட்டிலிருந்து சரக்கு வாகனம் சென்ற போது, எதிரே லாரி வந்த நிலையில், சரக்கு வேனை ஓட்டுநர் திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சென்னையை சேர்ந்த பாண்டியன், தேனியை சேர்ந்த சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.