பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த கலந்தாய்வு, நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்த 2 நாட்கள், கல்லூரிகளைத் தேர்வு செய்ய 2 நாட்கள், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவை உறுதி செய்ய 2 நாட்கள், இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை உள்ளவர்களுக்கு இன்று முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள், சிறப்புப் பிரிவினர் என 6 ஆயிரத்து 442 பேருக்கு ஏற்கனவே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது