இதற்குத் தான் இந்த புதிய அமைப்பு...அறிவித்தது தமிழ்நாடு அரசு!

இதற்குத் தான் இந்த புதிய அமைப்பு...அறிவித்தது தமிழ்நாடு அரசு!

ஒன்றிய அரசின் அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் நோக்கில், மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசு, இதற்காக 15 பேர் உறுப்பினர்களாக நியமித்துள்ளது. நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் இந்த அமைப்பிற்கு தலைமை வகிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்களும் அமைப்பின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அணையில் ஆய்வு மேற்கொள்வது, அணையின் பாதுகாப்பை உறுதி செய்வது, நீர் வரத்து, தண்ணீர் வெளியேற்றத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 - ஜோஸ்