முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முக்கிய ஆவணமாக கருதப்படும் செல்போன் எங்கே? மதுரைக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை...

பாலியல் புகாரில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முக்கிய ஆவணமாக கருதப்படும் செல்போன் எங்கே? மதுரைக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை...

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள நடிகை சாந்தினி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனிடையே,  மணிகண்டனும், நடிகை சாந்தினியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மணிகண்டனின் செல்போனில் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்போன், மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அந்த ஆதாரங்களை கைப்பற்றுவதற்காக, மதுரைக்கு மணிகண்டனை அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் எந்தெந்த பகுதிகளுக்கு எல்லாம் அந்த துணை நடிகையை அழைத்துச் சென்றார்? என்பது தொடர்பாக விசாரணை செய்து பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.