ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஆர்.எஸ்.எஸ். ரவியாக பணியாற்றிவருகிறார்-திருமாவளவன்!

ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஆர்.எஸ்.எஸ். ரவியாக பணியாற்றிவருகிறார்-திருமாவளவன்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா நடைபெற்றது.

கட்சி நிதியாக தங்கம்

இதில் அமைச்சர் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி நிதியாக விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் உறுப்பினர்கள் 533 கிராம் தங்க நகைகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய தொல்.திருமாவளவன் அக்டோபர் இரண்டு காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. ஆனால் தற்பொழுது ஆர். எஸ். எஸ். அமைப்பானது மத ஊர்வலத்தை முன்னெடுத்திருக்கிறது.

சமூகத்திற்கு எதிரானது

இது சமூகத்திற்கு எதிரானது எனவும் பேசினார். அக்டோபர் இரண்டாம் நாளிலேயே அன்றைய தினம் சமூக நல்லிணக்க பேரணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆர். எஸ். எஸ் ரவியாக செயல்படும் ஆளுநர்

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆர். எஸ். எஸ். மத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்களின் மத ஊர்வலம் நடைபெற்றால், மதக் கலவரங்களை தூண்டும் விதமாகவும் நடைபெறும் என தெரிவித்தார். இதனால் இந்த மத ஊர்வலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தார். ஆளுநர் ரவி அவர்கள் தற்போது ஆர். எஸ். எஸ். ரவியாக பணியாற்றி வருகிறார் என திருமாவளவன் இந்நிகழ்வில் கூறினார்.