சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! இன்றும் நீடிக்கும்!!

சென்னையில் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு காலை வரை பரவலாக மழை பெய்து வந்தது.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! இன்றும் நீடிக்கும்!!

சென்னையில் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு காலை வரை பரவலாக மழை பெய்து வந்தது.

குறிப்பாக பெரம்பூர், புரசைவாக்கம், பெரியமேடு, ஓட்டேரி, அம்பத்தூர், அமைந்தகரை, போரூர், ராமபுரம், ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகரான பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயில், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வந்தது.

மேலும் தி நகர், பாண்டிபஜார் ,மேற்கு மாம்பலம், எழும்பூர் , நுங்கம்பாக்கம், பட்டாளம், 
சேப்பாக்கம், வேப்பேரி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் கிண்டி, வேளச்சேரி, தரமணி ஆகிய இடங்களிலும் இரவு நேரத்திலும் விட்டு விட்டு காலை வரை மழை பெய்து வந்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழையானது பெய்தது. 

சென்னை நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.