ஹெலிகாப்டர் விபத்து 3 தலிபான்கள் மரணம்!

ஹெலிகாப்டர் விபத்து 3 தலிபான்கள் மரணம்!

ஆப்கானிஸ்தானில் நீண்டகாலம் நடைபெற்ற போரில் தலிபான்களை தோற்கடிக்க முடியாமல் அமெரிக்க படைகள் வெளியேறின. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஆப்கன் அரசாங்கத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். பிறகு அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்களை  தலிபான்கள் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் நடந்த இப்பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 3 தலிபான்கள் உயிரிழந்தனர்.