ஓபிஎஸ் வழக்கு.... இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது!!

ஓபிஎஸ் வழக்கு.... இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி  விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டது

இதனை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏதேனும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என்று  கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை  நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதையும் படிக்க:  சாக்லேட்டில் நெளிந்த புழு... அதிர்ச்சியில் சாக்லேட் பிரியர்கள்!!!