இனி இவர்களும் ஊரடங்கின் போது வெளியில் செல்லலாம்.! -அமைச்சர் அறிவிப்பு.! 

இனி இவர்களும் ஊரடங்கின் போது வெளியில் செல்லலாம்.! -அமைச்சர் அறிவிப்பு.! 

தமிழகத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் தொலைதொடர்பு ஊழியர்கள் பணிநிமித்தம்  வாகனங்களில் சென்று வர அனுமதி  அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் .மனோ தங்கராஜன் கூறியுள்ளார். 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் தொழில்நுட்பத் துறை அமைச்சர். மனோ தங்கராஜ்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர்  கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 16 மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்க தமிழக முதலமைச்சர் மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்  எனக் கூறினார்.


மேலும், தமிழ்நாட்டில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் தொலைத்தொடர்பு ஊழியர்கள் அவர்கள் பணி நிமித்தமாக  தனது வாகனங்களில் வெளியில் சென்று வர தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது என்றும், அவர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டி பணி நிமித்தமாக சென்று வரலாம் எனவும் கூறினார்.