ஓனான்குடி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது!

ஓனான்குடி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்அருகே ஓனாங்குடி கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏழாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் அரிமளம் சாலையில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு 10 ஜோடிகளும், நடுமாடு 20 ஜோடிகளும், கரிச்சான் மாடு 44 ஜோடிகளும் என மொத்தம் 64 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு தனித்தனி பிரிவிலாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் போகவர பத்து கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன இந்த போட்டியில் எல்லையைக் கடக்க ஜோடி மாடுகள் சாலையில் சீறிப்பாய்ந்து ஓடின இதனை சாலையின் இரு புறமும் நின்ற பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். பின்னர் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஓணாங்குடி ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் நகரத்தார்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.